சுமார் 9.3 மில்லியன் மக்கள் வாழும் டோக்கியோ நகரில் நாளாந்தம் 11 ஆயிரம் மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் வெளியேற்றப்படுவதுடன், இவற்றை முகாமைத்துவம் செய்வதற்காக இது போன்ற 23 மத்திய நிலையங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி அவர்கள், பார்வையிட்ட சினகாவாவில் உள்ள திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சுமார் 60 மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் நாளாந்தம் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூழல் நட்புடைய வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், அந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.
கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு மேலதிக பெறுபேறாக உற்பத்தி செய்யப்படும் அனல்மின் மின்சக்தியாக மாற்றப்படுவதுடன், இந்த மின்சக்தி திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் பயன்பாட்டுக்காக பெற்றுக்கொள்ளப்படுவதுடன், எஞ்சிய தொகை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் திண்மக் கழிவு பிரச்சினையை தீர்ப்பதற்கு இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும், இதற்கு ஜப்பானின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் தலைவரினால் இந்த நிலையத்தின் பணிகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு விரிவாக விளக்கப்பட்டது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்ஹ ஆகியோரும் இந்கிழ்வில் கலந்துகொண்டனர்.