ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 21ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் தற்போது கல்வி கற்றுவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படைத் தகைமைகள் பரீட்சிக்கப்பட்டதன் பின்னர் அவர்களை இவ்வாறு இணைத்துக்கொள்வதற்கும் இக்கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.