தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்த புதிய நல்லிணக்க அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் பேசும் மக்களின் தேசிய, சமய மற்றும் கலாசார அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையிலான முழு நேர ஒளிபரப்புக்கள் இந்த அலைவரிசையில் இடம்பெறும்.
அமைச்சர்கள் மங்கள சமரவீர, மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவித்தான, பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் ஆகியோரும் வெளிநாட்டு தூதுவர்கள், சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகளும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி ரவி ஜயவர்தன, பணிப்பாளர் நாயகம் துஷிர மெலெவ்வேதந்திரி, செயற்பாட்டு பணிப்பாளர் அமல் கஜமன்கே உள்ளிட்ட பணிக்குழுவினரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
“நல்லிணக்க அலைவரிசை” ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது
![](/images/news/2018/February/sanhisiyawe_nalikawa.jpg)