நான்கு மதங்களின் வழிபாட்டுத் தளங்களும் இந்த ஆயிரம் ரூபா நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் உருவங்களும் புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளன.

5 மில்லியன் எண்ணிக்கை கொண்ட நாணயத் தாள்கள ; வெளியிடப்படவுள்ளதுடன் நாணயத ; தாளின்தொடர் இலக்கம் ளு70Æ1 000001 – ளு70Æ5 1000000 ஆக இருக்கும். தாளின் திகதி 2018.02.04 ஆகும்.


இந்நாணயத் தாள் இலங்கையில் எந்தவொரு தொகைக்குமான கொடுப்பனவிற்கும் சட்டரீதியான நாணயமாக இருக்கும் என்பதுடன் இது சுற்றோட்டத்திலிருக்கும் பொழுது மத்திய வங்கியின ;
பொறுப்பாகவும் இருக்கும்.

நாணயத்தாள் உத்தியோக பூர்வமாக மத்திய வங்கியின ; ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியினால்நிதி அமைச்சர் திரு. மங்கள சமரவீரவிடம ; நேற்று உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டது.

ஞாபகார்த்த நாணயத்தாள் 06.02.2018 இலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படவுள்ளது. அதேநேரம் ஆரம்பத் தொடர் இலக்கங்களுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான நாணயத் தாள்கள் கவர்ச்சிகரமான மடிப்பொன்றில் வைக்கப்பட்டு
ஒவ்வொன்றும் ரூ.1,300 இற்கு இல.54, சதம் வீதி, கொழும்பு 01 இல் அமைந்துள்ள பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலையிலும் மத்திய வங்கியின் அநுராதபுரம், மாத்தறை, மாத்தளை, திருகோணமலை மற்றும ; கிளிநொச்சி பிரதேச அலுவலகங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.