உயர்கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு நடைபெறவுள்ளது.

ரயில் நிலையத்தின் காரணமாக கனேமுல்ல நகரத்தில் அடிக்கடி ஏற்படும் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 1700 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்டதொகையில் அமைக்கப்பட்டள்ள இந்த பாலம் 504 மீற்றர்களாகும். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 20 மாத காலத்திற்குள் இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.