நேற்று பிற்பகல் விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் முதலில் சமய அனுஸ்டானங்களில் ஈடுபட்டதன் பின்னர் நிகழ்வில் கலந்துகொண்டார்.
முன்னாள் பிரதமர் தீ.மு. ஜயரத்னவினால் புதிய உப பிரதான சங்க நாயக்கருக்கு சாசனப் பத்திரம் வழங்கப்பட்டதுடன் ஜனாதிபதி அவர்கள் புதிய உப பிரதான சங்க நாயக்கருக்கு எண்வகை தானப்பொருட்கள் வழங்கி ஆசிர்வாதம் பெற்றார்.
ஹெல்பொடகம சுகத்தீராபிதான நாயக்க தேரர் இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
தர்ம போதனைகளை ஆற்றுவதில் சிறந்து விளங்கும் தேரர் பௌத்த சாசனத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றிவரும் சேவைகளை பாராட்டி ஷியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரிய பிரிவினரால் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை அஸ்கிரி கெடிகே விகாராதிபதி, அஸ்கிரி மகா விகாரை பிரிவின் அனுநாயக்க வண. வெடருவே உபாலி நாயக்க தேரர், ஹிந்தகல ரஜமகா விகாராதிபதி வண. எம்பில்மீகம பஞ்ஞாகித்தி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏகநாயக்க, முதலமைச்சர் சரத் ஏகநாயக்க மற்றும் மக்கள் பிரநிதிகள் பலரும், பிரதேசவாசிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.