இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கம் இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்றிட்டங்கள் குறித்து இலங்கை பாராட்டுவதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

2005, 2015 காலப்பகுதியில் இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். லசந்த விக்ரமதுங்க இதில் ஒருவராவார். மேலும் பல ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மேலும், கடத்தல் சம்பவங்களும் இந்த காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. கடந்த கால ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கும், மௌனிக்கச் செய்வதற்கும், குரூரமான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில ஊடகங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கின என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.