இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு மூன்று வருட கால பகுதிக்கு 60 மில்லியன்(1.2பில்லியன் ரூபா) குரோன்களை வழங்குவதற்கு நோர்வே இணக்கம் தெரிவித்துள்ளது

இலங்கை வந்துள்ள நோர்வேயின் இராஜாங்க செயலாளர் மேரியன் ஹேகன் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் கொழும்பில் நேற்று நடந்த சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.நோர்வே பங்களிப்பினூடாக இந்த பிரதேசத்தில் செயலாற்றும் அதிகார அமைப்புகளுக்கு முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல உதவியாக அமைந்திருக்கும். நோர்வே வெளிவிவகார அமைச்சர் எரிக்சென் சொரிட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.
நல்லெண்ண செயற்பாடுகளில் கண்ணிவெடி அகற்றல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். தேசிய மற்றும் சர்வதேச நிறுவனத்தின் பங்களிப்புடன் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை இலங்கையில் முன்னெடுக்க உள்ளது. இதனூடாக யுத்தக் காலப் பகுதியில் பலவந்தமாக தமது பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் தமது பிரதேசங்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக திரும்ப கூடிய வாய்ப்பு வழங்கப்படும் என எரிக்சென் சொரிட் தெரிவித்துள்ளார்.