நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர, சீனத் தூதர் மேதகு செங் ஸீயுவான் அவர்களையும் அவருடனான தூதுக்குழுவையும் திறைசேரியில் 11ம் திகதி சந்தித்தார். அமைச்சர் அவர்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் மீளவும் தொடர்புபடுவது குறித்து சீனத் தூதருக்கு விளக்கமளித்ததுடன், சீன அரசாங்கம் இலங்கைக்குத் தொடர்ந்தும் வழங்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

சீனத் தூதர் மேதகு செங் ஸீயுவான் அவர்கள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தனது நாட்டின் ஆதரவை மீள வலியுறுத்திக் கூறியதுடன், சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் மீளவும் தொடர்புபடுவது குறித்த அவர்களது ஆதரவிற்கு உறுதியளித்தார்.
இந்தக் கூட்டத்தில் திறைசேரியின் செயலாளர் கலாநிதி. ஆர்.எச்.எஸ் சமரதுங்க, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் திரு. மனோ தித்தவெல மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.