2019ஆம் ஆண்டுக்கானவரவுசெலவுதிட்டத்தை தயாரிப்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ளட்டுள்ளது.

இதுதொடர்பான விபரம் பின்வருமாறு:
2019ஆம் ஆண்டுக்கானஒதுக்Pட்டுதிருத்தசட்டம் 2018ஆம் ஆண்டுஅக்டோபர்மாதம் 9ஆம் திகதிபாராளுமன்றத்தில. சமர்ப்பிக்கப்பட்டதுடன் பாராளுமன்றத்தின் அமர்வு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அந்ததிருத்தசட்டத்திற்கான பாராளுமன்ற அனுமதியைபெற்றுக்கொள்ளமுடியாமல் போனது. அரசியல் யாப்புக்கு அமைவாக புதிய ஒதுக்கீட்டுதிருத்தசட்டத்தைமீண்டும் சமர்ப்பிப்பதற்கு அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வரையில் 2019ஆம் ஆண்டில் முதல் 4 மாதக்காலப் பகுதிக்கென அரசாங்கத்தின் செலவை உள்ளடக்கியவகையில் இடைக்கால கணக்குஅறி;க்கை 2018 டிசம்பர் மாதம் 21ஆம் திகதிபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட. அன்றையதினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைவ இடைக்காலகணக்கறிக்கை மூலம் உள்ளடக்கிய அடுத்த 2019ஆம் ஆண்டின் முதல் 4 மாதக்காலத்திற்கான செலவுகளை உள்ளடக்கிய 2019ஆம் ஆண்டுக்கான புதிய ஒதுக்கீட்டுதிருத்தசட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும்.
இதற்கமைவாக 2019ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவு திட்டம் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவருனிறது. தற்போதையஅரசாங்கத்தின்நிதி ஒருங்கிணைப்புவேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் மற்றும் 2021ஆம் ஆண்டளவில் முன்னெடுப்பதற்கு திட்மிடப்பட்டுள்ள கீழ் கண்ட மத்தியகால அரசநிதி இலக்கைஅடையம் வகையில் ஒழுங்குபடுத்துவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறைஅமைச்சர் மங்களசமரவீரஅவர்கள் சமர்ப்பித்தபரிந்துரைக்குஅமைச்சரவைஅங்கிகாரம் வழங்கியுள்ளது.
1. அரசவருமானத்தைதேசியஉற்பத்தியில் 15 சதவீதத்திற்கும் மேலாகஅதிகரித்தல்
2. அரசாங்கத்தின் மீண்டுவரும்செலவைதேசியஉற்பத்தியில் 15 சதவீதமாகவரையறுத்தல்
3. அரசாங்கத்தின் முதலீட்டைமொத்ததேசியஉற்பத்தியில் 5.5 சதவீதமாகமுன்னெடுத்தல்
4. வரவுசெலவுதிட்டத்தில் துண்டுவிழும் தொகையைதேசியஉற்பத்தியில் 3.5 சதவீதமாகவரையறுத்தல்
5. திருப்பிசெலுத்தப்படாதஅரசகடனைமொத்தஉற்பத்தியில் 70 சதவீதத்திலும் பார்க்ககுறைவாகமுன்னெடுத்தல்